நான் பாடும் போது என் உதடு Song Lyrics :: Tamil Christian Song Lyrics :: Jebathotta Jeyageethangal Vol41

Song: Naan Paadumpothu
Lyrics, Tune & Sung by Fr.S.J.Berchmans
Album :: Jebathotta Jeyageethangal Vol 41


(நான்) பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்-2

1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்-2
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக-2

நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது

2.எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே-2
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும்

3.(நான்) கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்-2
(ஒரு) குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும்

4.(என்) இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்-2
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும்

5.(நான்) முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே-2
(என்) பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே-2-நாள்தோறும்

*

إرسال تعليق (0)
أحدث أقدم