Song :: Neer Vendum Yesuvae :: Arpana Sharon Rajkumar :: Adonai Vol3

Adonai Vol3
Arpana Sharon Rajkumar
Tamil Christian Song
Song :: Neer Vendum Yesuvae


மாலை நீங்கும் நேரம் உம்மை காண நானும் 
இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்திருந்தேன் 
கடலில் சீறும் அலைகள் கரையில் சேரும் இடத்தில்
இதயம் உம்மிடம் மன்றாடுகின்றேன் 
ஹே....ஹே 
பகலும் போனால் என்ன 
இருளும் சூழ்ந்தால் என்ன 
இயற்க்கை தீண்டினால் என்ன 
அச்சம் ஏன்தான் என்ன - நீர் வேண்டும் 
என்றும் என்னோடு வேண்டும் 
உந்தன் அன்பு என்றும் மாறாது 
ஓஹோ....நீர் வேண்டும் 
என்றும் என்னோடு வேண்டும் 
உந்தன் அன்பு சூழ்நிலையை கரைத்திடும் 

மனிதன் போனால் என்ன 
கைகள் விரித்தாள் என்ன 
நினைவுகள் வாட்டினால் என்ன 
இமைகள் நனைந்தால் என்ன 
நீர் வேண்டும் 
என்றும் என்னோடு வேண்டும் 
உந்தன் அன்பு என்றும் மாறாது 
ஓஹோ....நீர் வேண்டும் 
ஏசுவே நீர் என்றென்றும் வேண்டும் 
உந்தன் அன்பு சூழ்நிலையை கரைத்திடும் 
என் சூழ்நிலையை கரைத்திடும்

tamil christian songs lyrics, adonai 3 arpana sharon songs

*

إرسال تعليق (0)
أحدث أقدم