உம் பாதம் பணிந்தேன் - Um Patham Paninthen Lyrics - Tamil Christian Song Lyrics

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா

உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே


1. பரிசுத்தமே பரவசமே

பரனேசருளே வரம் பொருளே

தேடினதால் கண்டடைந்தேன்

பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம்


2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்

புதிய கிருபை புது கவியால்

நிரப்பி நிதம் நடத்துகின்றீர்

நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்


3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்

நெருங்கி உதவி எனக்களித்தீர்

திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்

தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்


4. என் முன் செல்லும் உம் சமூகம்

எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்

உமது கோலும் உம் தடியும்

உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்


5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்

கொடியாய் அடியேன் படர்ந்திலங்க

கினை நறுக்கிக் கிளை பிடுங்கி

கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம்


6. என் இதய தெய்வமே நீர்

எனது இறைவா ஆருயிரே

நேசிக்கிறேன் இயேசுவே உம்

நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்


7. சீருடனே பேருடனே

சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்

சீக்கிரமாய் சேர்த்திடுவீர்

சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

*

Post a Comment (0)
Previous Post Next Post